×

வெள்ளம் சூழ்வதை தடுப்பேன் : அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மக்களோடு மக்களாக சாதாரணமாக பழகும் அவரது செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேளச்சேரி தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்தால் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம். என்ன குறைகளாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதியையும் பொதுமக்களுக்கு அளித்து வருகிறார். மழை காலத்தில் வேளச்சேரி பகுதி தெருக்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்வது நீண்டகால பிரச்னையாகும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் பிரசாரத்தின்போது உறுதி அளித்தார்.

 இதனால் பொதுமக்கள் அவருக்கு முழு ஆதரவை தருவதாகவும், எங்கள் ஓட்டு கை சின்னத்துக்கு தான் என்றும் அசன் மவுலானாவை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து நேற்று மாலை 177வது வட்டத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் 6வது மெயின்ரோடு மற்றும் அதன் சுற்றுபகுதிகளிலும், ஆதம்பாக்கம் இ.பி.காலனி மெயின் ரோடு, பிருந்தாவன் நகர், நேதாஜி சர்ச் ரோடு, நேதாஜி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். வட்ட செயலாளர் முருகவேல், பகுதி செயலாளர் சு.சேகர், வேளச்சேரி எஸ்.பாஸ்கரன், வே.ஆனந்தம், பெ.சாரதி, க.பாலாஜி, எம்.ஏ.சங்கர், விநாயகமூர்த்தி, திருவேங்கடம், கோ.ரவி, ஏழுமலை, எம்.குமரேசன், ந.டில்லிகுமார், தனசேகரன், த.சேகர், ஆவின்குமார், வ.ஆதி, கோ.சீனிவாசன், பத்மராஜன், வேல்முருகன், முருகேசன், துஷ்யந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Asan Maulana ,
× RELATED 365 நாட்களும் தண்ணீர் நிற்கும்...